sin información
🕗 horarios
Lunes | ⚠ | |||||
Martes | ⚠ | |||||
Miércoles | ⚠ | |||||
Jueves | ⚠ | |||||
Viernes | ⚠ | |||||
Sábado | ⚠ | |||||
Domingo | ⚠ |
Lourdhusamy Pillai Colony, Edamalaipatti Pudur, Tiruchirappalli, Tamil Nadu 620023, Indien
contactos teléfono: +91
mapa e indicacionesLatitude: 10.7782954, Longitude: 78.6943821
Ashok Kumar Lovely melodies
::Beautiful temple. Maintained by preists. Neat and clean.
priyanka priya
::Superb temple.. when I entered into temple i feel better nd very devotional..
Suba Shree
::We can see all god in a single temple including sai baba, shiva, vishnu, murugan, vinayagar, hanuman, and more idols . Very pleasant place . Hanuman is very special here, where a 48 day fasting will help you to get all you wish.
City in360
::Nice & calm place for pleasant workship
Murugan Sivananantha Perumal
::திருச்சி அருகே உள்ள டி.வி.எஸ் நகரில் உள்ளது, சிவா– விஷ்ணு ஆலயம். ஆலய முகப்பு சாலையிலேயே உள்ளது. ஆலய அமைப்பு வளாகத்தில் வலது புறம் நவக்கிரக நாயகர்களின் சன்னிதி இருக்கிறது. இங்கு நவக்கிரக நாயகர்கள் அனைவரும், தங்கள் துணைவியருடன் அருள்பாலிப்பது சிறப்பு அம்சமாகும். இடதுபுறம் ஆஞ்சநேயர் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தில் மூன்று சன்னிதிகள் கருவறையுடன் கூடியதாக உள்ளது. முதல் சன்னிதியில் பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். ஐந்து முகங்களுடன் அருள்பாலிக்கும் இந்த விநாயகரை வழிபட்டால், கல்வி, ஞானம், செல்வம், ஆரோக்கியம், நிம்மதி ஆகியவை கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். அடுத்து நடுநாயகமாய் சுந்தரேஸ்வரர் சன்னிதி உள்ளது. லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கும் இந்த இறைவனின் திருமேனி சுயம்பு என்றும், இன்ன பொருளால் உருவானது என்று சொல்ல இயலாது என்றும் கூறும் நிர்வாகத்தினர், ‘இறைவனின் திருமேனியைத் தொடும்போது ஜீரோ டிகிரிக்கும் கீழ்பட்ட ஜில்லென்ற ஓர் உணர்வு உண்டாவதை தவிர்க்க இயலாது’ என்கின்றனர். அடுத்துள்ள சன்னிதியில் முருகப்பெருமான், வள்ளி– தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இந்த மூன்று சன்னிதிகள் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளன. பஞ்சமுக விநாயகரின் கருவறை முகப்பில் சரஸ்வதியும், சுந்தரேஸ்வரர் சன்னிதி முகப்பில் ஆதி விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரரும், முருகப்பெருமான் சன்னிதி முகப்பில் ஐஸ்வரிய லட்சுமியும் வீற்றிருக்கின்றனர். மகா மண்டபத்தின் வலதுபுறம் இறைவி மீனாட்சியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற திருக்கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டப நுழைவுவாசலில் வலதுபுறம் கால பைரவர் அருள்பாலிக்கிறார். மகா விஷ்ணு ஆலயம் அடுத்து மகா விஷ்ணுவின் தனி ஆலயம் உள்ளது. மூலவராய் மகாவிஷ்ணு நின்ற திருக்கோலத்தில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்க மகாமண்டபத்தின் தென்புறம் மகாலட்சுமி வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். பெருமாளின் தேவக்கோட்டத்தில் லட்சுமிநரசிம்மர், ஹயக்ரீவர், தன்வந்திரி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்கு ஏகாதசி திருவிழாவும் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. பெருமாள் சன்னிதியின் முன்புறம் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. இந்த ஆலயத்தில் பிரதோஷம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று இறைவன், இறைவி ஆலயத்தைச் சுற்றி வலம் வருவது வழக்கம். சித்திரையில் மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் வெகு அமர்க்களமாக நடைபெறுகிறது. சிவராத்திரி, பொங்கல், தீபாவளி, மாதப்பிறப்பு நாட்களில் இறைவன்– இறைவிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள டி.வி.எஸ். நகரில் உள்ளது இந்த சிவா விஷ்ணு ஆலயம். சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நிறைய நகரப் பேருந்துகள் உள்ளன.